இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாறும் வள்ளுவமும்

படம்
வார்த்தைகளால் மாறிய வரலாறு குடியரசாக விளங்கிய ரோம் நாட்டின்  சர்வாதிகாரியாக ஆக விரும்பிய ஜூலியஸ் சீசர், ஐட்ஸ் ஆஃப் மார்ச் (மார்ச் 15) அன்று செனட் சபையிலே படுகொலை செய்யப்பட்டார். ரோமில் உள்ள சீசரின் சிலை (நன்றி: விக்கீபீடியா)  சீசரின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் ரோம் குடியரசு முறைக்கு வரவிருந்த சர்வாதிகார ஆபத்தை நீக்கிவிட்டதால், பொதுமக்கள் தங்களின் கொலைச்செயலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று கணக்குப் போட்டனர், சீசரைப் படுகொலை செய்த குழுவின் முக்கியத் தலைவர்களான புரூட்டஸூம் கேசியஸூம்.  பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சீசர் சடலத்தின் முன்பு நின்றவாறு அவரின் தோழரான மார்க் ஆண்டனி ஆற்றிய உரை, வரலாற்றின் போக்கையே மாற்றியது.  மார்க் ஆண்டனியின் உரை- ஓவியம் (நன்றி: விக்கீபீடியா)  ஷேக்ஸ்பியர் எழுதிய "ஜூலியஸ் சீசர்" நாடகத்தில் "Friends, Romans, Countrymen, lend me your ears!" எனத் துவங்கும்- மார்க் ஆண்டனியின் முக்கியத்துவம் வாய்ந்த அவ்வுரை. ஆண்டனியின் பேச்சைக் கேட்ட பொதுமக்களுக்கு சீசரின் மீதான மதிப்பு உயர்ந்தது; அவரைக் கொன்ற செனட்டர...

வரலாறும் வள்ளுவமும்

படம்
3. துணிவிருந்தால் துயரில்லை 1972ஆம் ஆண்டு- ஜெர்மனி நாட்டின் மியூனிக் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. எந்த ஜெர்மனி தேசத்தில் கொடுங்கோலன் ஹிட்லரால் கொத்துக்கொத்தாக யூதர்கள்  கொல்லப்பட்டனரோ, அதே ஜெர்மனி தேசத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள  யூதர்கள் சென்றனர்- இஸ்ரேல் நாட்டின் விளையாட்டு வீரர்களாக.   துரதிருஷ்டவசமாக இம்முறையும் அந்த யூதர்கள் அங்கே கொல்லப்பட்டனர்; "கறுப்பு செப்டம்பர்" என்னும் பாலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அவர்களைக் கொன்றனர். மியூனிக் படுகொலையில் தொடர்புடைய "கறுப்பு செப்டம்பர்" இயக்கப் போராளி  (நன்றி: The Hindu) பாலஸ்தீன் விவகாரத்தில் பாலஸ்தீனர்களுக்கு  இஸ்ரேல் புரிந்த துரோகத்திற்காகவும், பாலஸ்தீன் குறித்த செய்திகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் "கறுப்பு செப்டம்பர்" இயக்கப் போராளிகள் இவ்வாறு கொடுஞ்செயல் புரிந்தனர். ஆனால், இத்தகைய அதிரடிகளால் இஸ்ரேலை நடுங்கிட வைக்க முடியவில்லை. மியூனிக் படுகொலைகளின் மூளைகளாக விளங்கிய ஒவ்வொரு நபரையும் உலகின் பல்வேறு நாடுகளில் தேடிச்சென்று ...

வரலாறும் வள்ளுவமும்

படம்
2. வெ(கொ)ல்லும் சொல் சொல்லால் ஆக்கம்: இரண்டாம் உலகப் போர்  தொடங்கிய நேரம் (செப்டம்பர் 1939); போலந்தின் மீது ஜெர்மனி போர் தொடுக்க, போலந்திற்கு  ஆதரவாக ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தது இங்கிலாந்து. போரின் ஆரம்ப கட்டத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பெற்ற தொடர் வெற்றிகளால், இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மீது அதிருப்தி எழுந்தது.  அந்த இக்கட்டான சூழலில் இங்கிலாந்தின் பிரதமர் நெவில் சேம்பர்லேன்,  பதவியிலிருந்து விலகினார் (மே 1940). நாட்டை வழிநடத்தும் பெரும்பொறுப்பு சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தோள்களில் இறங்கியது.                                     நெவில் சேம்பர்லேன்                                                      சர் வின்ஸ்டன் சர்ச்சி ல் ( நன்றி: விக்கீபீடியா) அன்றைய சூழலில் ஜெர்மனியே வெற்றிபெறும் என்ற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கியிருக்க...

வரலாறும் வள்ளுவமும்

படம்
1. ஜார் வம்சத்தின் வீழ்ச்சி கம்யூனிசப் புரட்சிக்கு முன்பிருந்த இரஷ்ய நாட்டை சுமார் முன்னூறு வருடங்களாக ஆண்டு கொண்டிருந்தனர் ஜார் வம்சத்தினர். "யுகப் புரட்சி" என்று மகாகவி பாரதியார் வருணித்த கம்யூனிசப் புரட்சியால்,  ஜார் வம்சத்தின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது; ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னனும் அவன் குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னன் ( நன்றி: விக்கிபீடியா) இரஷ்ய வரலாற்றுப் புத்தகத்தின் இரத்தக்கறை படிந்த இப்பக்கங்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டென்றாலும், அவற்றில் மிக முக்கியமானவை இரண்டு காரணங்கள்: அ) இரஸ்புட்டீன் : இரஸ்புட்டீன் என்னும் மதவாதியை மன்னனும் அவன் மனைவியும் அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்டனர். இரஸ்புட்டீன் ( நன்றி: விக்கிபீடியா) "தனக்குப் பிறகு இரஷ்ய நாட்டை ஆளப் பிறந்த தனது ஒரே மகனுக்கு ஏற்பட்ட இரத்தம் உறையா நோயை (Haemophilia), தனது மந்திர சக்தியால் சரிசெய்யக் கூடியவர்" என்ற நம்பிக்கை இரஸ்புட்டீனின் மீது மன்னருக்கு ஏற்பட்டதன் காரணமாக, மதவாதி இரஸ்புட்டீனுக்கு அரண்மனை வாழ்வு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு அந்த மதவாதி ஆடிய ஆட்டங்...